Monday 10 October 2011

மறைந்துவரும் மரபுகள்

உலகமயமாதலின் காரணமாக புதிய பொருட்கள் வருகையால் மரபு வழியாக செய்யப்படுகின்ற கைவினைப்பொருட்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.  உதாரணமாக ஏர் ஓட்டும் இயந்திரம் வருகையால் மரபு வழியாக செய்துவந்த ஏர் கலப்பையின் பயன்பாடுக்ள் இல்லாமல் போய்விட்டது. கதிர் அறுக்கும் இயந்திரம் வருகையால் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக மரபு வழியாக செய்து வந்த கைவினைப் பொருளான ஏர் கலப்பை செய்யும் தொழிலாளிகள் வாழ்க்கைத்தரம் நலிவடைந்து வருகிறது.  அதைபோல மண்பாண்டம் , பாய் நெசவு , செங்கல்சூளை போன்ற மரபு வழியாக செய்யக்கூடிய தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கைவினைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் சென்றடைய எனது ஆய்வு உறுதுணையாக இருக்கும்.